பாலியல்பு மற்றும் சமூகப்பாலினம்(Sexuality & Gender)

பாலியல் தொடர்பான சிந்தனை,மனப்பாங்கு மற்றும் நடத்தைகள் நம் அனைவருக்கும் இயல்பானவை மட்டுமின்றி மனித வாழ்வின் தொடர்ச்சிக்கு அடிப்படையானவை ஆகும். இது வெளிப்படையாக பேசக்கூடாத ஒன்றோ அருவருக்கத்தக்க ஒன்றோ அல்ல.

பாலியல்பை பற்றிய விழிப்புணர்வு நம் அனைவரின் பாதுகாப்பிற்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை குறைத்திடவும் வழிவகுக்கும்.

ஆம். பாலியல் உரிமை ஆண் பெண் இருபாலருக்கும் சமமானதுதான். உதாரணத்திற்கு:-தன்னை காதலிப்பதாக ஒருவர் கூறினால் அதை ஏற்றுக்கொள்வதா? அல்லது மறுப்பதா? என மற்றவர் (யாரிடம் கூறப்பட்டதோ அவர்) முடிவு செய்வதும் அதன் படி நடப்பதும் பாலியல் உரிமைகளில் ஒன்றாகும்.

மனிதர்களுள் ஆணினம், பெண்ணினம் என்று இரண்டு வகை இனங்கள் மட்டுமே பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாலியல் குறைபாட்டினால் பாதிக்கப்படும் மற்றவர்களை மூன்றாம் பாலினம் என்று அங்கீகரிப்பது நியாயமான செயலாகும்.

அதற்கான பல காரணங்களுள் கீழ்கண்ட சில காரணங்களை முதன்மையானதாகக் கூறலாம் :

• ஆண்கள் பெண்களை தமக்கு சமமாக பார்க்க வேண்டியதில்லை என்ற ஆணதிக்க சிந்தனை…

• ஊடகமும் சமூகமும் பெண்களை ஒரு கவர்ச்சி பொருளாக பார்க்கவைப்பதால்...

• பெண்கள் ஆண்களை விட வலிமை குறைந்தவர்கள் என்ற எண்ணமும் சீண்டினால் பதிலடி கொடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் ஆண்களுக்கு இருப்பதால்…

• பெண்கள் எதிர்த்து பேசமாட்டார்கள் (கோழைகள்) என்கிற எண்ணம்.

பெண்கள் மட்டுமல்ல விதிவிலக்காக ஒருசில சம்பவங்களில் ஆண்களும் இதற்கு ஆளாகின்றனர்.

பெண்களை ஒரு போகப் பொருளாக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடலாம் என்ற தவறான எண்ணம் சமூகத்தில் நிலவுவது இதற்கு முதன்மை காரணம்.

பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அதனை வெளியில் கூறினால் அப்பெண்ணுக்கும் அவரது குடும்பத்திற்கும் அவமானம் ஏற்படும் என்ற மோசமான சமூக, கலாச்சார சூழலை ஆண்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சமூகத்தில் பாலியல் வன்முறைக்கு எதிராக போதுமான விழிப்புணர்வும், செயல்பாடும் இல்லாததும் மிக முக்கிய காரணமாகும்.

பாலியல் வன்முறை இருபாலருக்கும் உடல் மற்றும் மனரீதியான ( நீண்டகால) பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதே.

பாலியல் வன்முறையால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறிப்பிட்ட பிரச்சனையின் வீரியம், மற்றும் தாக்கத்தின் அடிப்படையில் மாறுபடும்.

பெண்கள் பாதிக்கப்படும் போது சமூகமும்,ஊடகமும் பெண்கள் மீதே பழி போட்டு தூற்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் மேலும் பாதிப்பு அடைகிறாள்.

பெண்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியும், எதிர்கால வாழக்கையும் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

கவர்ச்சி என்பது ஆடையில் இல்லை – பார்க்கும் பார்வையில் உள்ளது. அதே சமயத்தில் ஆரோக்கியத்தையும், மதிப்பையும், கௌரவத்தையும் தரக்கூடிய ஆடைகளா என்பதை ஆண் பெண் இருபாலரும் கவனத்தில் கொள்வது அவசியம்.

பெண்கள் பாதிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்விலும் அவளது ஆடையைக் குறை கூறுவது ஆணின் வக்கிரத்தனமான ஆணாதிக்க வெறியை பிரதிபலிக்கிறது. எப்படிப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என்பது தனிநபர் விருப்பத்தினை சார்ந்தது.

பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிற ஆயுதமாக ஆடைகள் பயன்படுத்துவதை சகித்துக்கொள்ளத் தேவையில்லை.

வளரிளம் பருவம் Adolescenece)

குழந்தை பருவத்திலிருந்து இளமைபருவத்தை நோக்கி வளருகின்ற நிலையே வளரிளம் பருவம் ஆகும். அதாவது 13 வயது முதல் 19 வயது வரையிலான பருவத்தை இது குறிக்கிறது.

பொதுவாக 12 முதல் 16 வயதுவரையுள்ள காலத்தில்குழந்தைகள் பருவமடைகிறார்கள். இப்பருவத்தில் உடலிலும் மனதிலும் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகிறது.

இப்பருவத்தில் ஆண்களின் விந்துபையிலிருந்து டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோனும் பெண்களின் சினைப்பையிலிருந்து ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனும் சுரந்து இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதுவே பருவமடைதல் ஆகும்.

12 முதல் 16 வயதில் பெண்களின் கருப்பையை ஒட்டியுள்ள சூலகத்தில் சினை முட்டை வளர்ச்சி அடைந்து வெளியேறி மாதவிடாய் சுழற்சி தொடங்குவதை ‘பெண் பருவமடைந்துவிட்டாள்’என்கிறோம். (ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மரபு காரணமாக இதுதாமதமாக அல்லது சற்று முன்னரே கூட நடக்கவும் வாய்ப்புள்ளது).

ஆண்களுக்கு மாதவிடாய் நிகழாது. ஆனால் இவ்வயதில் இனப்பெருக்க மண்டல உறுப்புகளின் வளர்ச்சியும் அதையொட்டி நிகழும் உடல் மற்றும் மனமாற்றங்களும் பருவமடைதலின் அறிகுறிகளாகும்.

இது வளரிளம் பருவத்தில் டெஸ்டோஸ்டிரான் என்னும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதாலும் முகத்தில் உள்ள சபேசியாஸ் என்னும் சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டாலும் அது பெரிதாகி பருவாகும். அதை உடைத்தால் அல்லது கிள்ளினால் சீழ் பிடிக்கும். அந்த சீழ் படும் இடங்களில் கூடுதலாக பருக்கள் தோன்றக்கூடும்.

பெண்களுக்கு மாதவிடாய் கால கட்டத்தில் பரு வருவது இயல்பானது. சில நாட்களில் அது மறைந்துவிடும். அதை காயப்படுத்தாமல் இருந்தால் அதிலுள்ள கிருமிகள் பிற இடத்தில் பரவுவதைத் தடுக்கலாம்.

முகம் அசுத்தமாக இருப்பதாக உணரும் போதும் தூசு நிறைந்த சூழல் அல்லது வெயிலில் வெளியே சென்று விட்டு வரும் பொழுதும் முகத்தினை குளிர்ந்த நீராலும், இயற்கையான குளியல் மாவு பயன்படுத்தியும் சுத்தப்படுத்தலாம். காய்கறிகள், பழங்கள் அதிகம் உட்கொண்டால் முகப்பரு வருவது சற்றுகுறையும்.

முகப்பரு பிரச்சினை அதிகரித்தால் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது நல்லது.

அது அறிவியல் பூர்வமான அறிவுரை அல்ல. நமது சமூகத்தில் பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் இருக்கக்கூடிய மோசமான மனப்பான்மையையும், நம்பிக்கையையும் அது வெளிக்காட்டுகிறது.

பெண்களை ஒரு போகப் பொருளாக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடலாம் என்ற தவறான எண்ணம் சமூகத்தில் நிலவுவது இதற்கு முதன்மை காரணம்.

கண்மூடித்தனமான சமூகக் கட்டுப்பாடுகளும், வீண்பேச்சுக்களும்,ஓர் பெண்ணும் ஆணும் பேசினாலே காதலிக்க துவங்கிவிடுவார்கள் அல்லது சுயகட்டுப்பாடின்றி நடந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றன.

பெற்றோருக்கும் கூட பாலியல் விழிப்புணர்வு கல்வி அவசியம் தேவை என்பதை அத்தகைய அறிவுரை சுட்டிக்காட்டுகிறது.

வளரிளம் பருவத்தில் வரும் எல்லா வகை உணர்வுகளையும் கட்டுப்படுத்த முடியாது (உ.ம்) கோபம், பொறாமை, காதல், காமம்… ஆனால் பாதிப்பில்லாத, நேர்மறையான வகையில் (பாசிட்டிவானமுறையில்) அவற்றை கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான நட்பு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அக்கறையுடன் கவனத்துடன் பாலுறவு பற்றி பேசலாம். சமூக கலாச்சார காரணிகளால் ஆண் பெண் இருபாலினரும் அவ்வாறு எளிதாக பேசிட சாத்தியமான சூழல் இருப்பது இல்லை.இந்த சூழல் ஆரோக்கியமான நிலைக்கு மாற்றப்பட வேண்டும்.

நம் இனப்பெருக்க உறுப்புகளை அறிந்திடுவோம்.

பெண்களின் இனப்பெருக்க உறுப்பின் வெளிப்புற தோற்றம் நீண்ட சதை பிடிப்பு கொண்ட இரு தோல் மடிப்புகள் கொண்டதாக (லிபியா மெஜோரா) இருக்கும். இது பெண் உள்ளுறுப்புகளை முழுமையாக பாதுகாக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் இவ்வுறுப்பானது அளவிலும் அமைப்பிலும் சிறிதளவில் மாறுபாடு கொண்டதாக இருக்கும்.

உள் உதடுகள்: (லிபியா மெஜோரா)
மெஜோராவின் உள் பாகத்தில் உள்ளதை விட நீளம் குறைவாக சதை மடிப்புகள் கொண்டதாக இருக்கும். இதன் மேற்பகுதி இரண்டாகப் பிரிந்து கிளைடோரி யஸை (சுமரி) சுற்றி அமைந்துள்ளது. பெண் உணர்ச்சியால் தூண்டப்படும் போது இது ஈரப்பசையாவதோடு இவற்றின் நிறமும் மாறுபடும்.

உணர்ச்சி பகுதி:
இது பட்டாணி போல் சிறியது. சிறுநீர் பைக்கு மேலாக உள்ளது. இதில் உணர்ச்சி நரம்புகள் அதிகம் உள்ளது.

பிறப்புறுப்பு துவரம்: அல்லது அல்குல் :
இது கருப்பையிலிருந்து ஆரம்பித்து வெளித் துவாரம் வரையுள்ள குழாயாகும். உடல் உறவின் போது ஆண் குறியை இது தன்னுள்ளே ஏற்றுக்கொள்கிறது. இது விரிவடையும் தன்மையுடையதால் உடலுறவின்போது ஆண்குறியை ஏற்றுக்கொள்வதோடு பிரசவத்தின்போது குழந்தையை கருப்பையிலிருந்து வெளிக்கொணரவும் பயன்படுகிறது.

கன்னித்திரை:
இது மெல்லிய சல்லடை போன்ற திசுவாகும். பிறப்பு உறுப்பு குழாயின் நுழைவாயிலில் அமைந்துள்ளது.

கர்ப்பப்பை வாய் :
இது கருப்பையின் கீழ்பாகம் மற்றும் பிறப்பு உறுப்பின் மேல் பகுதி வரை நீண்டிருக்கும்.

கர்ப்பப்பை (கருப்பை):
இது பேரிக்காய் வடிவத்தில் மேல் பாகம் அகலமாகவும் கீழ்பாகம் குறுகியதாகவும் உள்ள தசையிலான உறுப்பு ஆகும். வயிற்றின் அடிப்பாகத்தில் அமைந்து உள்ளது. இதன் மேல்பாகத்தின் இரு பக்கங்களில் இரு குழாய்கள் உள்ளது இவை கருக்குழாய்கள் எனப்படுகிறது. கருப்பையின் உட்பகுதியில் ஒட்டிக்கொண்டு தான் கருமுட்டை குழந்தையாக வளர்ச்சியடைய துவங்குகிறது.

சினைக்குழாய்:
கருப்பையின் மேல் பாகத்தில் பக்கத்திற்கு ஒன்றாக சினைப்பை வரை உள்ள இவ்விரு குழாய்கள் சினைக்குழாய் என்கிறோம்.

சினைப்பை அல்லது அண்டகம்:
பாதம் பருப்பு போன்ற வடிவமைப்புக் கொண்டு பக்கத்திற்கு ஒன்றாக கருப்பையின் இருபக்கமும் இவை உள்ளன. பெண்ணின் கருமுட்டை இங்கு தான் உற்பத்தி ஆகின்றது. பருவ வயது வந்த பெண்ணின் சினைப்பைகள் கருமுட்டைகளை மாதத்திற்கு ஒன்றாக சுழற்சி முறையில் உற்பத்தி செய்கின்றது. இவற்றிலிருந்து ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் உற்பத்தி ஆகின்றது.

ஆண்குறி:
 ஆண்குறி என்பது ஆணின் இனப்பெருக்க உறுப்பு. அது எலும்பில்லாதது. ஆனால் தசைகளாலும் நரம்புகளாலும் ஆனது. சாதாரணமாக ஆண்குறியின் நீளம் சுமார் 4 முதல் 6 இஞ்ச் வரை இருக்கும். இது ஒருவருக்கொருவர் மாறுபடும்.

 ஆண்குறி இரண்டு பகுதிகளை கொண்டது. தலை பாகம் சற்று பருத்து இருக்கும். இப்பகுதியை மென்மையான தோல் மூடியிருக்கும். இத்தோல் மேலும் கீழும் அசையும் தன்மை உடையது. இப்பகுதி உணர்ச்சி மிகுந்த பகுதியாகும் இதைச்சுற்றியுள்ள சில சுரப்பிகளிலிருந்து வரும் திரவங்கள் மென்தோலின் கீழ் தேங்கி மாவு போல் தோன்றுகிறது. இதற்கு “ஸ்பெக்மா” என்று பெயர். இதனை அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும். இந்த மெல்லிய தோல் சிறு மடிப்பு மூலமாக ஆண்குறியின் உடல்பாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தோல் மடிப்பு “பிரினுலம்” என்று அழைக்கப்படுகிறது.

 ஆண்குறியின் தலையை அடுத்துள்ள பகுதி ஸ்பாஞ்ச் போன்ற மூன்று அடுக்கு திசுக்களால் ஆனது. அதிக உடல்வெப்பம் அல்லது உடலுறவின் போது இந்த ஸ்பாஞ்ச் திசுவில் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. அதனால் அது பருமனாகவும் கடினமாகவும் மாறி விறைப்படைகிறது.

 உடலுறவின்போது (ஆண் - பெண்) இருவருக்குமே தோன்றும் இன்பம் ஆண்குறியின் நீளம் அல்லது தடிமனை பொறுத்து வருவதல்ல.

 இந்த உறுப்பு சிறுநீரை உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது. உடலுறவின் போது விந்துணுவும் ஆண்குறி வழியாகத்தான் வெளியேறும். ஆயினும் விந்துவும் சிறுநீரும் மாறுபட்ட நேரங்களில் வெளிவருவதால் அவையிரண்டும் ஒன்றாக சேர்ந்து எப்போதும் வெளியேறுவதில்லை.

விரைப்பை:
விரைப்பை ஆண்குறியின் அடிப்பாகத்தில் உள்ளது. விரைக்கொட்டைகளை தாங்கியிருப்பதற்கும் அவற்றை சரியான வெப்பநிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது. குளிரில் இத்தசை சுருங்கும். வெப்பமான சூழ்நிலையில் விரிவடையும்.

விரைக்கொட்டை:
இடது வலது புறங்களிலும் விரைக்கொட்டை அமைந்திருக்கும். விரைக்கொட்டையில்தான் (டெஸ்டிஸ்) உயிரணு உற்பத்தியாகிறது. அது ஆயுள் காலம்வரை உற்பத்தியாகும். இதனுள் சிறுசிறு குழாய்களும் மற்றும் சில சுரப்பிகளும் உள்ளன. டெஸ்டோஸ்டிரான் என்னும் ஹார்மோன் இங்கு உற்பத்தி ஆகின்றது.

செமினல் வெஸிக்கல் அல்லது விந்தகம்:
விந்தகம் விந்துநீர் எனப்படும் திரவப்பொருளை உற்பத்தி செய்கின்றது. இது மனிதனின் ஆயுட்காலம் வரை உற்பத்தியாகும். விந்து அவ்விடத்திலேயே சேகரிக்கப்படுகின்றது. உயிரணுக்களுக்கு பாதுகாப்பைத் தருவதும் அவை பெண்ணின் கருமுட்டை வரை சென்றடைய தேவையான வழுவழுப்பைத் தருவதும் விந்துவின் பணியாகும். விந்தணு காரத்தன்மை கொண்டது. இதில் புருக்டோஸ் என்ற சர்க்கரைப்பொருள் உள்ளது.

உயிரணு நாளம் (நரம்பு):
விரைக்கொட்டைகளில் இடது வலது பக்கங்களில் உயிரணு நாளம் அமைந்திருக்கும். விரைக்கொட்டையில் உற்பத்தியாகும் உயிரணு இந்த நாளத்தில் சேமிக்கப்பட்டு மேல் நோக்கி எடுத்துவரவும் உதவுகிறது.

ப்ராஸ்டேட் சுரப்பி:
வால்நட் அல்லது காற்றுபோன பந்து வடிவம் கொண்ட இச்சுரப்பி சிறுநீர்ப்பையின் அடிப்பாகத்தில் உள்ளது. சிறுநீர்க்குழாயின் முதல் பாகம் இதன் வழியாகச்செல்கிறது. ப்ராஸ்டேட் சுரப்பி விந்துவையும் உயிரணுவையும் ஒன்றாக சேமித்து வைக்கின்றது. இச்சுரப்பி விந்துவையும் உயிரணுவையும் ஆணின் உணர்ச்சியின் உச்சக்கட்ட நிலையில் வெளியேற்றச்செய்கின்றது.

கௌப்பர்ஸ் குழாய்கள்:
இவை விந்துக்குழாயின் இரு பக்கங்களிலும் (புராஸ்டேட்டின் அருகில்) உள்ளன. உடலுறவின் போது இந்த சுரப்பியும் தன் திரவத்தை சுரக்கின்றது. விந்து வெளியே வருவதற்கு சற்றுமுன் இத்திரவம் வெளிவரும். விந்துவும் சிறுநீரும் ஒரே குழாய் வழியாக வருகின்றது என்று பார்த்தோம். அதில் சிறுநீர் காரத்தன்மை கொண்டது. கௌப்பர்ஸ் சுரப்பியிருந்து வெளிவரும் திரவம் சிறுநீர் துகள்களையும் காரத்தன்மையையும் நீக்கி அந்த பாதையை விந்துவும் உயிரணுக்களும் செல்வதற்கு ஏற்றதாக மாற்றுகிறது.

சிறுநீர்க்குழாய்:
இக்குழாய் சிறுநீர் பையில் ஆரம்பித்து ஆண்குறியின் வெளித்துவாரம் வரை செல்கின்றது. இதன் வழியாகத்தான் சிறுநீர் மற்றும் விந்துவும் (செமன்) வெளியேற வேண்டும்.

மாதவிடாய் (Menstruation)

பெண்கள் பருவ வயதை அடைந்தவுடன் மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வெளிவரும் ஹார்மோன்கள் இனப்பெருக்க உறுப்புக்களை முக்கியமாக கருப்பை மற்றும் கருப்பையின் இருபுறங்களிலும் உள்ள சினைப் பைகள் போன்றவற்றை செயல்படுமாறு தூண்டுகிறது.

ஹார்மோன்களின் உதவியால் கருமுட்டை முதிர்வடைந்து சினைப் பையிலிருந்து வெளியேறி சினைக் குழாயின் வழியே கருப்பையை நோக்கி செல்கிறது. அவ்வாறு வந்த கருமுட்டை 24 மணிநேரத்திற்குள் விந்தணுவுடன் இணையாவிட்டால் செயலிழந்து பிறப்பு உறுப்பு வழியாக வெளியேற்றப்படும். கருமுட்டை கருவாக மாறாமல் சிதைந்துவிடும் போது கருப்பையின் உட்சுவரில் தோன்றிய மெல்லிய படலமானது பலவீனமடைந்து சிதைந்து வெளியேற்றப்படும் .இதனால் யோனித்துவாரம் வழியாக இரத்தப் போக்கு உண்டாகிறது. இதனை “மாதவிடாய்”என்று கூறுகிறோம்.

இது பொதுவாக 3 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும். பொதுவாக 25 – 28 நாட்களுக்கு ஒரு முறை இச்சுழற்சி தொடரும். மாதவிடாய் துவங்கிய கால கட்டத்தில் இந்த சுழற்சி ஒழுங்கற்று இருக்கலாம்.

பொதுவாக பெண்ணிற்கு 12 முதல் 14 வயதில் மாதவிடாய் ஆரம்பிக்கிறது. இது மரபு வழிகாரணங்கள், உணவு பழக்கவழக்கம் மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சியை பொறுத்து சில ஆண்டுகள் முன்னும் பின்னும் கூட துவங்கலாம். மாதவிடாய் சுழற்சி நின்று விடுவதை மெனோபாஸ் என்கிறோம். பொதுவாக 40 வயதுமுதல் 50 வயதிற்குள் மெனோபாஸ் துவங்கி சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் மாதவிடாய் வருவது நின்றுவிடுகிறது. ஒரு சிலருக்கு இந்தகால இடைவெளி சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடும்.

• மாதவிடாய் நேரத்தில் கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் அடிவயிற்றில் வலிஏற்படுகிறது.

• மாதவிடாய் காலகட்டத்தில் இடுப்பு பகுதியில் வலி அதிகமாக இருந்தால் சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாம். வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் படி பயன்படுத்தலாம். “பாதகோனசனா” போன்ற சில யோகாசனங்களையும் செய்து பயனடையலாம்.

• தினமும் இருமுறை (குளிர்ந்தநீரில்) குளிக்கவேண்டும். சுத்தமான குடிநீரை போதுமான அளவில் பருக வேண்டும்.

• மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தபோக்கில் வெளிக்காற்று படும்போது ஒருவித நாற்றம் உண்டாகும்.எனவே மாதவிடாய் காலத்தில் பிறப்பு உறுப்பை சுத்தமாக கழுவி உலர்வாக வைத்து கொள்ள வேண்டும்

• இரத்த போக்கிற்கு ஏற்றவாறு அல்லது போதுமான கால இடைவெளியில் சுத்தமான துணி அல்லது நாப்கின்களை மாற்றி உபயோகிக்க வேண்டும். துர்நாற்றம் இருந்தால் அணிந்திருக்கும் ஆடைகளை தினமும் மாற்ற வேண்டும்.

• மாதவிடாய் நேரத்தில் சிறிய அளவில் உடற்பயிற்சியும், போதுமான ஓய்வும் தேவை. உடலுக்கு வலுவூட்டக் கூடிய காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை போதியளவில் உண்ண வேண்டும்.

• மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் துணிகளை சோப்பு போட்டு நன்றாக அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். காயவைத்த துணிகளை ஒரு பெட்டியில் போட்டு அதில் சில வேப்பிலைகளை போட்டுவைக்கலாம், இதனால் பூச்சிகள் அண்டாது. இது ஒரு கிருமிநாசினியாகும்.

குட்டிபோட்டு, பாலுட்டும் பெருபாலான விலங்குகளுக்கும் மாதவிடாய் உண்டு. அவற்றின் மாதவிடாய் சுழற்சி மனிதர்களை போல் இல்லாமல் மாறுபட்டதாய் இருக்கும். கருப்பையின் உள்ளே ஈரப்பதத்தை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தும் இரத்தத்தை சில விலங்குகள் தமது உடலுக்குள்ளேயே மறுசுழற்சி செய்து பயன்படுத்திக்கொள்கின்றன.

மாதவிடாய் என்பது நமது உடல்கழிவுகளை (சிறுநீர், வியர்வை வெளியேறுவது போல) வெளியேற்றும் இயற்கையான ஒரு செயலாகும். மாதவிடாயையொட்டி வரக்கூடிய அசௌகரியங்கள் மற்றும் வலியை பொது இடங்களில் ஒரு பெண் வெளிகாட்டுவது பிறரையும் வருத்தமடையவைக்கலாம் அல்லது மற்றவரது கவனத்தை திசைதிருப்பக்கூடும். ஆயினும் அவர்களது நடமாட்டத்தை தடை செய்வதற்கு இதைக் காரணமாக கூறுவது முறையல்ல.

நம் நாட்டின் வடகிழக்கிலுள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் காமாக்கியா கோவில் உள்ளது. அங்குள்ள அம்மன் சிலையிலிருந்து வரும் செந்நிற அபிசேக நீரை மாதவிடாய் உதிரமாக கருதி அதை பிரசாதமாக இன்றும் தரப்படுகிறது.

ஆம். ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழிக்கும் போது ஆணுறுப்பை (அல்லது) பெண்ணுறுப்பை சுத்தம் செய்வது ஆரோக்கியமான பழக்கமாகும். இவ்வாறு செய்தால் நோய் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

பெண்களின் பிறப்புறுப்பின் செல்சுவர்களில் நிறமற்ற லேசான பிசுப்பிசுப்பான திரவம் இயற்கையிலேயே சுரக்கும். இது அமிலத்தன்மை உடையது. பெண்ணின் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வற்கும் கிருமிகள் தாக்காத வண்ணம் பாதுகாப்பதற்காகவும் இத்திரவம் சுரக்கிறது.

பெண் வயதுக்கு வருவதற்கு சிலநாட்களுக்கு முன்பும் மாதவிடாய் வருவதற்கு முன்னும் பின்னும் இரண்டு (அ) மூன்று நாட்களும் இத்திரவம் வருவது இயல்பானது. இதனையே வெள்ளைப்படுதல் என்கிறோம்.

இத்திரவம் நிறமற்ற நிலையிலிருந்து மாறுபட்டு (பழுப்பு அல்லது வேறுநிறத்தில்) இருந்தாலோ, துர்நாற்றம் உடையதாகவும் தோலில் அரிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலோ “மாறுபட்ட வெள்ளைப்படுதல்”என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய சூழலில் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

பெண்களின் பிறப்புறுப்பின் வாயில் பகுதி மலத்துவாரத்திலிருந்து வெளிவரும் கிருமிகளின் தொற்றுக்கு எளிதில் ஆளாகக்கூடும். அவ்வாறு உள்ளே நுழையும் கிருமிகள் கருப்பை வரை சென்று தாக்கக்கூடும். மேலும் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தமது பிறப்புறுப்பை தூய்மையாக வைத்துக் கொள்ளவில்லையெனில் கர்ப்பப்பை கோளாறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அடிக்கடி நிகழ்த்தப்படும் கருக்கலைப்பும் மரபணு கோளாறுகளும் பிறகாரணங்களாகும்.

காதல் (Love)

ஒருவர் மீது மற்றொருவருக்கு ஏற்படும் அதிகப்படியான ஈடுபாட்டை காதல் என்று கூறலாம்.. ஒருவரை ஒருவர் மதித்து ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்துவதும், புரிந்து கொள்வதும் காதல். எதிர்பார்ப்புகள் இன்றி அன்பு செலுத்துவதும் காதல்தான். காதல் எதன் மீதும் வரலாம் (உ.ம்) இயற்கை, கல்வி, பிறஉயிரினங்கள்…

காதல், ஈர்ப்பு என்ற சிறுபொறியில் துவங்கி உயிரை தியாகம் செய்யும் வரை பல்வேறு பரிணாமங்களை உடையது. காதல் உணர்வை முழுமைப்படுத்துவதில் காமத்தின் பங்கும் இருக்கும்.காதலும் காமமும் நமது மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பின் செயல்பாட்டினால் தூண்டப்படுவதாகும்.

காதல் ஆற்றலை தரக்கூடியது. அதனை வாழ்க்கையில் வெற்றியடைய பயன்படுத்துவதே புத்திசாலித்தனமாகும்.

இனப்பெருக்கம் என்பது வம்சத்தை நீட்டிப்பதற்கு அவசியம் என்ற செய்தி நம் மரபணுவில் பதிந்திருப்பதனாலும் அதனை அடைவதற்கான வழியாக எதிர்பாலினத்தவரின் மீது ஈர்ப்பும், காதலும் நம் மனதில் (மூளையில்) உருவாகிறது. வளரிளம் பருவத்தில் ‘காதல்’உணர்வு மேலோங்கி இருப்பது இயல்பானது. பிட்யூட்டரியில் ஒருவகை ஹார்மோன் அதிகளவில் சுரப்பதாலும் இந்த எண்ணம் இவ்வயதில் தோன்றுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஊடகங்களின் தூண்டுதலும் முக்கிய பங்குவகிக்கிறது.

ஒருவர் காதலித்துதான் ஆக வேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை. காதலிப்பது என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. எவரையும் கட்டாயப்படுத்துவது அநீதியாகும்.

பல பேர் மீது வருவது ஈர்ப்பு, பாலின கவர்ச்சி அதை காதல் என்று கூறுவது கடினமே. நமது சமூகத்தில் காதல் என்பது திருமண உறவில் நிறைவடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காதலிப்பது, திருமணம் செய்வது, குழந்தைபெறுதல் என்பது இயல்பான போக்காகும் (வாழ்க்கை முறையாகும்). இதை ஏற்றுக்கொண்டு காதலை கையாளத் தெரிந்திருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும்.

அதே சமயம் ஏதேனும் ஒரு சூழலில் காதல் தோல்வியுறும் பொழுது விரக்தியில் கொலை செய்வதும் தற்கொலை செய்து கொள்வதும் அறிவீனமாகும்.

இதனை தமிழ் இலக்கியத்தில் பொருந்தா காதல் (அ) காமம் என்று கூறுகின்றனர். இதனால் காதலின் அடுத்த நிலையான சேர்ந்து வாழ்தலில் பல்வேறு முரண்பாடுகள் (உடல் ரீதியான மற்றும் மனரீதியான தேவைகள்) ஏற்படும் போது அந்த காதல் தோல்வி அடையலாம். அதில் வெற்றிகண்டவர்கள் சிலரும் உள்ளனர்.

வளரிளம் பருவத்தில் வரும் காதல் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல், உறுதியான நிலைபாடு இல்லாமல் (கமிட்மெண்ட்) காதலிப்பதால் காதல் நீடிப்பதில்லை.

தான் வாழும் சூழல், வேலை, எதிர்கால இலட்சியம் இவைகளை அடைவதற்கான வழிமுறைகளோடு அன்பும் காதலும் தோன்றினால் அது முழுமையடைகிறது. அவ்வாறு இல்லாமல் இனக்கவர்ச்சியாலும், காமம் மட்டுமே குறிக்கோளாகவும் கொண்டு காதலிப்பதால் தான் பெரும்பாலான காதலர்கள் வெற்றி அடைவதில்லை.

சாதி, மதம், பொருளாதார அந்தஸ்து, தோற்றம், தவறான பழக்கவழக்கங்கள், எதிர்மறை குணங்கள் ஆகியவையும் காதலர்கள் பிரிவதற்கு பிறகாரணிகளாகும்.

வளரிளம் பருவத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படுகிறது; அறிவுப்பூர்வமாக எடுக்கப்படுவதில்லை. அந்த வயதினர் போதுமான அளவு முடிவெடுக்கும் திறன், வேலைவாய்ப்பு, எதிர்காலத்தைப் பற்றி புரிதலின்றி இருப்பார்கள். பல்வேறு சமூககாரணங்களாலும், தமது வாரிசுகளின் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தாலும் பெற்றோர் அந்த வயதில் ஏற்படும் காதலை பெரும்பாலும் ஆதரிப்பதில்லை.

திருமணம் (Marriage)

மனித இனம் தனது சந்ததிகளை (வாரிசுகளை) உருவாக்குவதற்கு கலாச்சார ரீதியில் கணவன் மனைவி என்ற உறவுமுறையோடு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதைத் திருமண வாழ்க்கை என்கிறோம். உரிய வயதில் திருமண உறவின் மூலம் நடைபெறும் உடலுறவே பாதுகாப்பானதும், சமூகத்தாலும், அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.

பெண் 21 வயது நிறைவு செய்த பின்பு தான் தாய்மை பேறை அடைவதற்கு முழுமையான உடல், மன நலத்தை பெறுதல் சாத்தியமாகும். உடல் ரீதியாக 21 வயதில் தான் ‘பெல்விக்ஸ’ எனப்படும் இடுப்பு எலும்பு முழு வளர்ச்சியை அடையும். அது சுகப்பிரசவத்திற்கு வழிவகை செய்யும்.

21 வயதிற்கு கீழ் திருமணம் செய்து கொண்டால் பிரசவம் சிக்கலாகவும் அறுவை சிகிச்சைக்கு ஆளாகலாம். அதிகளவில் மன அழுத்தமும், உடல் பலவீனமும் உண்டாகலாம். உரிய வயதில் திருமணம் செய்து பிள்ளை பெற்றால் பிரசவமும் சிக்கலின்றி எளிதாக முடியும், திருமண வாழ்க்கையும் நன்றாக அமையும்.

திருமணம் செய்து கொள்ள எந்தவித கட்டாயமும் இல்லை. திருமணம் செய்வதும், செய்து கொள்ளாமலிருப்பதும் தனிநபர் விருப்பு, வெறுப்பை பொருத்தது, ஆயினும் இயல்பான பாலியல் தேவைகளை திருமண உறவின் மூலம் கிடைத்த துணையின் உதவியோடு பூர்த்தி செய்து கொள்வது ஆரோக்கியமானதாக இருக்கும்.

பாலுறவு (Sexual Activities)

ஆண்குறியை பெண்ணின் பிறப்புறுப்பில் (வஜைனா) நுழைத்து உறவு கொள்வது பாலுறவின் மூலம் கிடைக்கக்கூடிய உச்சபட்ச சுகத்தினை அடைவதற்கான வழியாகும். பாலுறவு எண்ணத்தோடு கட்டித்தழுவுதல், கிள்ளுதல், முத்தமிடுதல் போன்றவையும் உடலுறவின் ஒரு அம்சமாகும்.

ஒரே பாலினத்தை சார்ந்த இருவர் உடலுறவு கொள்வதை ஓரினச்சேர்க்கை என்கிறோம். பெண் பெண்ணோடு உடலுறவு கொள்வதை ‘லெஸ்பியன்’ என்கிறோம். ஆண் ஆணோடு உடலுறவு கொள்வதை ‘கே’ என்கிறோம். இத்தகைய உறவுகள் பற்றிய காட்சிகள் நமது நாட்டிலுள்ள பல்வேறு கோயில்களில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. எனவே அத்தகைய எண்ணம் உடையவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே என்ற புரிதல் அவசியமாகும்.

உலகமெங்கும் செய்த கணிப்புகளில் அதில் தவறு ஒன்றும் இல்லை என கூறுகின்றனர். எத்தனை முறை செய்வது என்பதற்கு அவரவரது உடல் நலத்தைப் பொருத்தது என்பதே பதிலாகும். ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை நினைவில் கொள்வது நன்று.

ஒரு துளி விந்து உருவாக பல ரத்த அணுக்கள் விரயமாகும் என்பன போன்ற கருத்துகள் ஆதாரமற்றவை. அளவுக்கு அதிகமான சுய இன்பப்பழக்கம் நமக்கு கவனச்சிதைவை ஏற்படுத்தி அன்றாட பணிகளைப் பாதிக்கலாம்.

இப்பழக்கத்திற்கும் ஆண்மைக்குறைவிற்கும் நேரடியான சம்பந்தமில்லை. சுய இன்பப்பழக்கம் குறித்த குற்ற உணர்வு தேவையற்றது. அந்த குற்ற உணர்வுதான் தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை நாளடைவில் ஏற்படுத்தும். படிக்கும் வயதில், இலட்சியத்தை அடைய - அதற்கான வேலைகளில் கவனத்துடன் ஈடுபட்டால் இப்பழக்கம் குறைந்துவிடும்.

நம் கலாச்சார நெறிமுறைகளின் படி திருமணமாகாத ஒருவர் (சட்ட ரீதியாக 18 வயதிற்கு முன்) பாலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது. சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத வயதிலும், வகையிலும் பாலுறவு வைத்துக்கொள்ளும் ஒரு ஆணைவிட பெண்ணுக்கு உடல், மனம் மற்றும் சமூக ரீதியான பாதிப்புகள் பாதிப்புகள், (அவமானங்கள், வாழ்க்கையில் விரக்தி) அதிகளவில் ஏற்படக்கூடும். குழந்தைப்பருவம் மற்றும் வளரிளம் பருவத்தில் உடலுறவு வைத்துக்கொண்டால் இப்பிரச்சினைகளின் தாக்கம் அதிக நாட்களுக்கு நீடிக்கலாம்.

பாலியல் வேட்கை கட்டுக்கடங்காத பட்சத்தில் அத்தேவையை நிறைவு செய்வதற்கும், உடலுறவு மூலம் பரவக்கூடிய பாலியல் தொற்று, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதற்கும் சுய இன்பம் (சுய தீண்டல்) பாதுகாப்பானதாகும்.

இப்பழக்கத்திற்கும் ஆண்மைக்குறைவிற்கும் நேரடியான சம்பந்தமில்லை. சுய இன்பப்பழக்கம் குறித்த குற்ற உணர்வு தேவையற்றது. அந்த குற்ற உணர்வுதான் தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை நாளடைவில் ஏற்படுத்தும். படிக்கும் வயதில், இலட்சியத்தை அடைய - அதற்கான வேலைகளில் கவனத்துடன் ஈடுபட்டால் இப்பழக்கம் குறைந்துவிடும்.

பொதுவாக 28 நாட்கள் மாதவிடாய் சுழற்சியுள்ள பெண்களுக்கு 14வது நாள் கருமுட்டை சினைப்பையிலிருந்து வெளிவரும். முதிர்ச்சியடைந்த கருமுட்டை சினைப்பையில் வந்து சேர்வது ஓரிரு நாட்கள் சீக்கிரமாகவும் வரலாம் அல்லது தாமதமாகவும் வரலாம். 14 – 17 வது நாட்கள் உடலுறவு கொண்டால் கரு உண்டாகும் வாய்ப்பு அதிகம். எத்தனை முறை உடலுறவு கொள்வது என்பதைவிட கருமுட்டை வெளிவந்த 12 - 24 மணி நேரத்திற்குள் கருமுட்டையும் விந்தணுவும் இணைவதாலேயே கரு உண்டாகிறது.

பொதுவாக ஊடகங்கங்களில் காட்டப்படுவது போன்று பாலுறவு என்பது மணிக்கணக்கில் இடைவெளி இல்லாமல் தொடரக்கூடியது அல்ல.

பிறப்புறுப்பில் (வஜைனா) நுழைத்து உறவு கொள்வது சில நிமிடங்களே சாத்தியமாகும். உடலுறவு கொள்ளும் போது அவரவர் மனநிலையை, உடல்நிலையை பொறுத்து விந்து வெளியேறும் நேரம் அமைகிறது. விரைவில் விந்து வெளிவருவது ஒன்றும் அபாயகரமானது அல்ல

வளரிளம் பருவத்தில் தூக்கத்தில் விந்து வெளிப்படுதல் ஆரம்பித்து திருமணத்திற்கு பின்னும் அது தொடரும். உடலுறவு கொள்ளாத ஆண்களிடமும் விடலை பருவத்திலும் விந்து வெளிப்படுதல் சாதாரணமாக காணப்படுகிறது. திருமணத்திற்கு பின் நீண்ட நாட்கள் உடலுறவில் ஈடுபடாமலிருந்தாலும் தூக்கத்தில் விந்து வெளிப்படும். அதனை சரியாக புரிந்து கொள்ளாத சிலருக்கு தாழ்வு மனப்பான்மையும், மன அழுத்தமும் ஏற்படலாம். தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மூலமாக சரி செய்து கொள்ளலாம்.

இது அடக்கி வைக்கப்பட்ட பால் உணர்வின் வெளிப்படுத்துதலே தவிர வியாதி அல்ல. இதற்காக மன அழுத்தமோ குற்ற உணர்வோ கொள்ள தேவையில்லை.

பால்வினை நோய் உள்ளவருடன் உடலுறவு கொண்டால் பிறப்புறுப்புகளில் சுரக்கும் திரவம் அல்லது ரத்தத்தின் மூலமாக நோயாளியிடமிருந்து மற்றவருக்கு நோய்க்கிருமிகள் பரவுகிறது. எனவே, பால்வினை நோய் உள்ளவருடன் ஆணுறையின்றி உடலுறவு வைத்துக் கொள்ளுதல் பாதுகாப்பற்றதாகும்.

பாதுகாப்பற்ற உடலுறவிற்கு மேலும் சில உதாரணங்கள் :

. பலருடன் உடலுறவு கொள்வது அல்லது அத்தகைய நபருடன் ஆணுறையின்றி உடலுறவு வைத்துக் கொள்ளுதல்

. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்த பின்னர் இயற்கையான கருத்தடுப்பு முறைகளையோ அல்லது ஆணுறை, காப்பர்-டி, பெண்ணுறை, கர்ப்பத்தடை மாத்திரைகள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தாமல் உடலுறவு கொள்ளுதல்

. ஆணுறையின்றி ஆசனவாய் மூலமாக உடலுறவு கொள்ளுதல்

. மாதவிடாயின் போது ஆணுறையின்றி பிறப்புறுப்பு வாயிலாக உடலுறவு வைத்துக் கொள்ளுதல்

பாலினக் கவர்ச்சி, பாலியல் வேட்கை, ஈர்ப்பு ஆகியவற்றினை முறையாக கையாளத் தெரியாமை, சுய கட்டுப்பாடு இல்லாததும், இல்லற வாழ்வில் நேர்மையின்மை மற்றும் துணையின் மீது நம்பிக்கை இழத்தல் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.

அதிக எண்ணிக்கையிலான பாலுறவு தொடர்புகள் அதிகப்படியான இன்பத்தினை கொடுக்கும் என்ற தவறான நம்பிக்கையும். உடலுறவில் திருப்தியின்மையும், ஆபாச திரைப்படங்கள் மற்றும் அத்தகைய காட்சிகளின் தாக்கமும், தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னுதாரணங்களால் தூண்டப்படுதல் போன்றவையும் பிற காரணிகளாகும்.

திருமண உறவின் மூலம் கிடைத்த துணையுடன் மட்டுமே உடலுறவு கொள்வது சாலச்சிறந்தது. பலருடனான பாலுறவின் மூலம் பால்வினை நோய்கள், ஹெச்ஐவி எய்ட்ஸ் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையற்ற மன அழுத்தங்களும் சட்டம் மற்றும் சமூக, பொருளாதார ரீதியான பிரச்சினைகளும் ஏற்படலாம்.

எய்ட்ஸ் நோயுள்ளவர்களிடமிருந்து திரவம் (ஆணின் விந்து பெண்ணின் பிறப்புறுப்பு திரவம்) உடலுறவின் போது நோயற்ற மற்றவருக்கும் பரவுகிறது. இனப்பெருக்க உறுப்பில் பால்வினை நோயினால் ஏற்பட்ட புண்கள் இருக்குமானால் எச்.ஐ.வி கிருமி பரவும் வாய்ப்பு அதிகமாகிறது.

கருவுற்ற தாய் எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டிருந்தால் குழந்தைக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. இது அதிகமாக பரவுவது உடலுறவின் மூலம் தான். ஆயினும் சரியாக சுத்தம் செய்யப்படாத ஊசி மற்றும் பரிசோதிக்கப்படாமல் ஏற்றப்படும் இரத்தத்தின் மூலமாகவும் இது பரவுகிறது.

செயல்திட்டங்கள்:

உடலுறவின் போது ஆண்குறி விறைப்பு அடையாமல் இருப்பதும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும், போதிய வீரியத்தன்மை இல்லாமல் இருப்பதும் ஆண்மை குறைவு ஆகும். பிறவிக்கோளாறு மற்றும் பலவகை நோய்களாலும் ஆண்மை குறைவு ஏற்படலாம்.

இல்லை. கரு உண்டாவது ஆண்குறியின் நீளத்தை பொறுத்ததல்ல. பிறப்புறுப்பில் ஆண்குறியினால் செலுத்தப்படும் விந்தணுக்களே கருப்பை வழியாக சினைக்குழாயை அடைந்து அங்கு சினை முட்டையுடன் சேர்கின்றது. ஆகவே ஆண்குறியின் நீளத்தை விட பெண் குறியின் உள்ளே செல்லும் விந்தணுதான் முக்கியம் வாய்ந்தது.

பெண் பிறப்புறுப்பிலுள்ள திரவங்கள் காரத்தன்மை வாய்ந்தவை. இந்த காரத்தன்மையினால் ஆண் ஒரு முறை வெளியிடும் விந்திலுள்ள 50 கோடி உயிரணுக்களில் பாதிக்கு மேல் பெண்ணின் பிறப்புறுப்பில் பாதி வழியிலேயே மடிந்து விடும். சில உயிரணுக்களாவது சினை முட்டையை சென்றடைய வேண்டுமானால் அவற்றிற்கு ஓரளவிற்காவது பாதுகாப்பு கவசம் அவசியம். இதை தருவது விந்தணுக்களோடு சேர்ந்து வெளிவரும் கொழகொழப்பான (விந்துநீர்) திரவமாகும். இந்த திரவத்தின் அளவு குறைவாக இருந்தாலும் மொத்த விந்தணுக்களும் பெண்ணுறுப்பின் பாதி வழியிலேயே இறந்து விடும். இதனால் கருத்தரிப்பு நிகழாது.

பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட ஆண் பெண் இருவருக்கும் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு. இந்நோயை துவக்கத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தினால் இக்குறைபாட்டிலிருந்து தப்பி விடலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் இதை குணப்படுத்த முடியும்.

இக்குறைபாடுடைய சிலருக்கு விந்து மற்றும் பிற சுரப்பிகள் சரியாக இருக்கும். ஆனால் ஆண்குறி போதிய எழுச்சியும் விறைப்பும் பெற முடியாமலிருந்தால் விந்தை பெண்ணின் கருப்பைக்குள் சரியாக செலுத்த முடியாது.

ஆணின் விந்தில் போதுமான எண்ணிக்கையில் விந்தணுக்கள் இல்லாதிருக்கலாம்.

அதிக உடல் கொழுப்பு, அளவுக்கு மீறிய மது, போதை வஸ்துக்கள் மற்றும் நோய் போன்றவற்றால் விந்து உற்பத்தி ஆகாமலிருக்க வாய்ப்பு இருக்கிறது.

விந்தணு உருவாக விதைகளுக்கு பொருத்தமான தட்பவெப்பநிலை தேவை. ஆண்கள் மிகவும் இறுக்கமான நைலான் உள்ளாடைகள் அணிவதால் அதிகப்படியான வெப்பம் நிலவி விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது.

விந்தணுவின் வாழ்வுக்காலம் குறைவாக இருந்தால் சினை முட்டையை அடைய முடியாது. இதனால் கருத்தரிக்க முடியாது. ஒரு வேளை விந்தணுக்கள் தேவையான அளவு வேகத்துடன் நகரக்கூடியதாக இல்லாவிட்டாலும் கருத்தரிப்பு நிகழாது.

• சில பெண்களுக்கு கருப்பையில் கோளாறு ஏற்பட்டு சினை முட்டை உற்பத்தி ஆவதிலேயே இடையூறு ஏற்படுகிறது.

• சினை முட்டை உயிரற்று இருத்தல்.

• சினை முட்டையில் உண்டாகிய திரவம் சரியாக உற்பத்தி ஆகாமல் இருத்தல்.

• கருக்குழாய்களிலே கோளாறு ஏற்படுதல்.

• கருப்பை அளவில் சிறியதாக இருத்தல்.

• கருப்பை சாய்ந்திருத்தல்.

• கருப்பை ஒதுங்கியிருத்தல்.

• கொழுப்பு சேர்வது காரணமாகக் கருப்பை தடித்திருத்தல்.

• கருப்பை இறக்கம்.

• கருப்பையில் அதிகமாக வாயு சேர்ந்திருத்தல்.

• கருப்பை வாய் கன்னிப்போதல்.

மேற்கூறிய காரணங்களாலும் பெண்கள் தாய்மைப்பேறை அடைய முடியாமல் அவதியுறுகின்றனர்.

தேவையே பரிணாம வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. பரிணாம வளர்ச்சியே ஒவ்வொரு உயிரனங்ளுக்கும் எத்தனை வாரிசுகள் பிறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றது. விதிவிலக்காக ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களும் உண்டு. (உ.தா. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார்.

பொதுவாக உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில் பாலுறவில் முனைப்புடன் செயல்பட்டால் 60 வயதிலும் குழந்தை பெறுவது சாத்தியமே. குறிப்பாக கருப்பையும், சினைமுட்டையும், விந்தணுவும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம் - நவீன மருத்துவத்தில் நேரடி உடலுறவு இல்லாமல் கூட குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமே.

பிரசவம்&குழந்தைவளர்ப்பு (Delivery & Child Rearing)

கருவில் உள்ள குழந்தை பிறக்க தயார் என்பதை உணர்த்துவது பிரசவ வலியாகும். குழந்தையை வெளியேற்ற கர்ப்பப்பை சுருங்குவதால் அல்லது இறுகுவதால் பிரசவத்தின் போது கர்ப்பப்பையை சுற்றியுள்ள உறுப்புக்களுக்கு நெருக்கடியான நிலை ஏற்படுகிறது அதனால் பிரசவத்தின் போது பெண்களுக்கு வலிஏற்படுகிறது.

தாய்க்கு குழந்தையை பெற்றெடுக்க தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகள் கருத்தரித்த காலம் முதல் தேவைப்படுகிறது. கரு உண்டான நாள் முதல் தாயின் மனநிலை நல்ல முறையில் பராமரிக்கப்படுவதும் அவசியமாகும்.அப்போதுதான் தாய்-சேய் இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். சத்தான உணவு கிடைக்காத பட்சத்தில் குழந்தை எடை மற்றும் உயரம் குறைவாக பிறத்தல், ஊனமாக பிறத்தல், சிசு இறப்பு போன்றவை நிகழ்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பிரசவ வேதனையை தாங்கிக் கொள்ளும் வலிமை குறைதல் மற்றும் குழந்தைக்கு பால் கொடுக்க இயலாத நிலை ஏற்படலாம். உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுதலும் சரியான கால கட்டத்தில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதும் குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக வாழ்ந்திட வழிவகுக்கும்.

இளவயது திருமணமும் குறைவான வயதில் குழந்தை பெற முயல்வதும் பெரும்பாலான சிசு மரணத்திற்கு காரணமாகும். தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்திற்கும் தாயையே சார்ந்துள்ளது. தாய் சரியான முறையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உண்ணாதது, தாயின் உடல் நலம் சரியாக பராமரிக்கப்படாவிட்டால், குழந்தை பலவீனமாக இருத்தல் அல்லது உறுப்புகள் சரியாக வளர இயலாதது,பிரசவத்திற்கான போதிய மருத்துவ வசதிகள் இல்லாமை போன்றவை பிற காரணங்களாகும்.

ஒரு குழந்தை உயிர் பிழைக்கத் தேவையான அளவு முழுமையாக வளர்வதற்கு முன்பே அதன் பெற்றோர் கர்ப்பத்தை கலைத்து விட முடிவு செய்து அக்கருவை கருப்பையிலிருந்து நீக்குவதை கருக்கலைப்பு என்கிறோம். அவ்வாறு திட்டமிடப்படாமல் கருதானாகவே கலைந்துவிட்டால் அதைக் கருச்சிதைவு என்கிறோம்.

கருவுற்ற தொடக்கத்தில் 16 வாரங்களுக்குள் மருத்துவமனையில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான அறையில் பயிற்சியும் அனுபவமும் பெற்ற மருத்துவரால் கருக்கலைப்பு செய்யப்படுவதே கருவுற்ற பெண்ணுக்குப் பாதுகாப்பானது.

மருத்துவமனை அல்லாத சுகாதாரமற்ற சூழலில் மருத்துவத்தில் தேர்ச்சியற்றவர்களால் செய்யப்படும் போது அவை பெண்ணின் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது. சட்டத்திற்குப் புறம்பான வகையில் செய்யப்படும் கருக்கலைப்பு பெரும்பாலான இளந்தாய்மார்களின் மரணத்திற்கு காரணமாகிறது.

எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது தம்பதியினரின் விருப்பம் சார்ந்தது. இரண்டுக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்று சட்டம் கூறவில்லை. ஆயினும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவே அரசு குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகம் செய்தது. இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அதற்கு ஏற்ற குடும்ப, பொருளாதார சூழலை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஒரே குழந்தையானாலும் சரி ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தையாக இருந்தாலும் சரி வளர்ப்பில் குறைகளின்றி இருப்பது அவசியம்.

ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தைதான் வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் பிறந்த குழந்தையைக் கொல்வதும் தண்டனைக்குரிய சட்டவிரோத செயலாகும்.

குழந்தை பிறந்தது முதல் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரையிலும் தாய்ப்பால் மற்றும் சுத்தமான தண்ணீரைத் தவிரவேறு எந்த உணவும் இனிப்பு கலந்த திரவமும் தரக்கூடாது. செயற்கை முறையில் கெமிக்கல் கலந்து தயாரிக்கப்படும் அனைத்து வகை சர்க்கரை மற்றும் தேன் போன்றவை குழந்தையின் உடல் நலத்தை பாதிக்கும்.

குழந்தைக்கு தேவைப்படும் அனைத்து விதமான ஊட்டச் சத்துக்களும் தாய்பாலில் இருப்பதால் பிறந்தது முதல் இரண்டு(2) வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கசெய்கிறது. குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு பின்பே பழங்கள், புரதம் மற்றும் இதர இணை உணவுகள் கொடுக்க வேண்டும்.

நமது உடலில் வாழும் பாக்டீரியா போன்ற நுண்ணியிர்களின் எண்ணிக்கை நமது மொத்த செல்களின் எண்ணிக்கையை காட்டிலும் நூறு மடங்கு அதிகமாகும்.

அவற்றைத் தவிர நம்மைச் சுற்றிலும் பல கோடிக்கணக்கான நுண்ணியிர்கள் உள்ளன. அவற்றில் சில வகை நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடியவை.

எனவே நோய் தொற்றுக்களை தடுப்பதற்காகவே தடுப்பூசிகளும், மருந்துகளும் உள்ளன.

போலியோ, காமாலை, போன்ற சில நோய்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாத்திட குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசிகளும், மருந்துகளும் போட வேண்டியது அவசியமாகிறது.